பெங்களூரில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்
பெங்களூர்:
காவிரிப் பிரச்சினை தொடர்பாக அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்க கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடக்கிறது.
காவிரிப் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது. பிரதமரைச் சந்தித்து தமிழக எம்.பிக்கள் மனு கொடுத்ததைத் தொடர்ந்து நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக, கர்நாடக அணைகளைப் பார்வையிட்ட இக்குழு, கர்நாடக அணைகளில் கூடுதல் நீர் இருப்பதாக மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந் நிலையில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை கர்நாடக முதல்வர் தரம்சிங் கூட்டியுள்ளார்.
விதான்செளதா கூட்ட அரங்கில் இன்று நடக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், காவிரிப் பிரச்சினை தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று ஏற்கனவே முதல்வர் தரம்சிங்கும், துணை முதல்வர் சித்தராமையாவும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications