For Daily Alerts
Just In
வாக்காளர்கள் பெயர் நீக்கம்: மதுரையில் தேர்தல் கமிஷன் அதிகாரி விசாரணை
மதுரை:
வாக்காளர் பட்டியல் குளறுபடி தொடர்பாக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணை அதிகாரியான பி.ஜே.தாமஸ், இன்று மதுரையில் விசாரணை நடத்தினார்.
வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதனால் இவர்கால் சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தல் வாக்களிக்க முடியவில்லை.
இது தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. விசாரணை அதிகாரியாக கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இரு நாட்களுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டத்தில் விசாரணையை ஆரம்பித்த அவர் இன்று மதுரையில் விசாரணை மேற்கொண்டார்.. மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பிற தேர்தல் அதிகாரிகளிடமும் தாமஸ் விசாரணை நடத்துகிறார்.
பின்னர் வாக்காளர்களின் வீடுகளுக்கும் சென்று விசாரணை மேற்கொள்ளவுள்ளார்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Tuesday, June 15, 2004, 5:30 [IST]