பழனி: பஞ்சலோக முருகன் சிலையை ஆய்வு செய்த அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

பழனி:

பழனி முருகன் கோவில் பஞ்சலோக சிலையை பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு செய்தார்.

பழனி முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் போக முனிவரால் உருவாக்கப்பட்ட உற்சவமூர்த்திக்குப் பதிலாக பஞ்சலோக அபிஷேக மூர்த்தி சிலையை தமிழக அரசு வைத்தது.

இந்த புதிய சிலை, பழைய சிலையை மறைத்தது. இதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சமீபத்திய தேர்தல் தோல்விக்கும் இந்த சிலை வைக்கப்பட்டதற்கும் ஜோதிடர்கள் முடிச்சு போட்டு காரணம் சொன்னதையடுத்து புதிய சிலையை அகற்ற முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதையடுத்து படு ரகசியமாக பூஜைகள் நடத்தப்பட்டு சிலை அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட பஞ்சலோக சிலை இப்போது ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சிலைய பூட்டி வைப்பதும் தவறானது என்று குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

இந் நிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பழனி கோவிலுக்கு திடீரென வருகை தந்தார். சாமி கும்பிட்ட பின்னர், பஞ்சலோக சிலை வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று ஆய்வு செய்தார்.

பஞ்சலோக சிலைக்கு தினமும் பூஜைகள் நடைபெறுகிறதா என்று அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+