ஆசி பெற்ற ரஜினி
Subscribe to Oneindia Tamil
சேலம்:
போலீஸ் பாதுகாப்புடன் திருமண மண்டபத்தில் தங்கியுள்ள இளம் துறவி பரணீதரனிடம் ஏராளமான பொது மக்கள் ஆசி பெற்றுச் சென்ற வண்ணம் உள்ளனர்.
இரு மாதங்களுக்கு முன் இவர் கர்நாடக மாநிலம் மந்த்ராலயத்தில் உள்ள ராகவேந்திரர் மடாலயத்துக்குச் சென்றபோது அங்கு வந்த நடிகர் ரஜினியும் இளம் துறவிடம் ஆசி பெற்றதாக பரணீதரனின் ஆசிரம வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஜினியின் புதிய வீட்டில் வைப்பதற்காக ராகவேந்திர சுவாமிகளின் படத்துக்கு பூஜை செய்து அதை, பரணீதரன் வழங்கியுள்ளார். அப்போது அவரிடம் ரஜினி ஆசி பெற்றுத் திரும்பியுள்ளார்.
இந் நிலையில் இன்று பரணீதரனை சிவசேனை மாநிலத் தலைவர் தங்கராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் சந்தித்துவிட்டுத் திரும்பினர்.












Click it and Unblock the Notifications