கடன் சுமை: ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

கடன் சுமை அதிகரித்ததால், ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர் பண்ருட்டியில் உள்ள வங்கியொன்றில் வேலை பார்த்து வந்தார். வங்கிக்கு அருகிலேயே நகைகள் அடகு பிடிக்கும் தொழிலையும் செய்து வந்தார்.

வங்கி வேலை, அடகு பிடிக்கும் தொழில் மூலம் சரியான வருமானம் கிடைக்காததால் ஏராளமான கடன் வாங்கியுள்ளார் சுப்ரமணியன். கடன் சுமை அதிகரிக்கவே எப்படித் திருப்பிக் கட்டுவது என்று அவருக்குத் தெரியவில்லை.

இந் நிலையில் மனைவி புவனேஸ்வரி, மகன் விஜயக்குமார், மகள் ஜெயப்பிரியா ஆகியோருடன் தஞ்சாவூருக்கு வந்தார். அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கினார். பின்னர் கையுடன் கொண்டு வந்திருந்த விஷத்தை அனைவரும் அருந்தியுள்ளனர்.

மறுநாள் காலை வெகுநேரமாகியும் அறை திறக்கப்படாததால் போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் வந்து 4 பேரின் உடல்களையும் மீட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+