பொறியியல் கல்லூரிகள் விவகாரம்: அரசுக்கு வீரமணி கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் பெரும் குழப்பம் நிலவுவதாகவும், இதற்கு தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்றும் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டு கூத்து நடக்கிறது. மொத்தம் 3 நுழைவுத் தேர்வுகள், 6 ஒற்றைச் சாளர முறைகள் (சிங்கிள் விண்டோ) இருப்பதால் மாணவர்களும், பெற்றோர்களும் குழம்பிப் போய் விரக்தி அடைந்துள்ளனர்.
தமிழக அரசு பொது நல நோக்கில் செயல்பட்டு, உரிய நடவடிக்கை எடுத்து, தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்த வேண்டும்.
இதன் மூலம் தான் மாணவர்களும், பெற்றோர்களும் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்க முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications