பாலகங்காவுக்கு மீண்டும் வாரியத் தலைவர் பதவி
சென்னை:
மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற மத்திய சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் பாலகங்கா மீண்டும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய சென்னை மாவட்ட அதிமுக செயலாளரான பாலகங்கா, குடிசை மாற்று வாரியத் தலைவராக இருந்து வந்தார். சமீபத்திய மக்களவைத் தேர்தலில் தயாநிதி மாறனை எதிர்த்துப் போட்டியிட்டார். தேர்தலுக்காக தனது வாரியத் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
தேர்தலில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து அவர் பதவி இல்லாமல் இருந்து வந்தார்.
தென் சென்னை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக தனது வக்பு வாரியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பதர் சயீதை தேர்தல் தோல்விக்குப் பின் அதே பதவியில் மீண்டும் நியமித்தார் முதல்வர் ஜெயலலிதா.
ஆனால், பாலகங்கா மட்டும் பதவி இல்லாமல் விடப்பட்டார். இதனால் அவரை ராஜ்யசபா தேர்தலில் ஜெயலலிதா நிறுத்துவார் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது மீண்டும் குடிசை மாற்று வாரியத் தலைவர் பதவியையே வழங்கியுள்ளார்.
பாலகங்கா கேரளத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.












Click it and Unblock the Notifications