பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கும் இலவச சைக்கிள்: ஜெ. அறிவிப்பு
சென்னை:
பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கும் தலித் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச சைக்கிள் திட்டத்தை பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கும் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய மக்களவைத் தேர்தல் தோல்வியையடுத்து தினமும் ஒரு சலுகைத் திட்டத்தை அறிவித்து வருகிறது தமிழக அரசு. இப்போது 21வது சலுகைத் திட்டமாக இந்த இலவச சைக்கிள் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இதுவகை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இலவச சைக்கிள்கள் இனி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுதப்பட்ட சமூக மாணவிகளுக்கும் வழங்கப்படும்.
இத் திட்டத்தால் பிளஸ் ஒன், பிளஸ் டூ பயிலும் 2.96 லட்சம் மாணவிகள் பலன் பெறுவார்கள். இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 47.36 கோடி கூடுதல் செலவாகும்.
இதனால் உயர் நிலைக் கல்வியில் இருந்து விலகும் மாணவிகளின் எண்ணிக்கை குறையும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications