ஜெவுடன் தமிழக பா.ஜ.க. தலைவர் சந்திப்பு
சென்னை:
அதிமுகவுடனான உறவை பாஜக முறித்துக் கொள்ளவில்லை என்று தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய ராதாகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன்.
அதிமுகவுடன் நாங்கள் உறவை முறித்துக் கொள்ளவில்லை. எந்தக் கட்சியுடனும் நாங்களாகவே உறவை முறித்துப் பழக்கமில்லை. அந்த வகையில் அதிமுகவுடனான உறவும் நீடிக்கிறது.
தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவு நடந்தால், அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜக வாக்களிக்கும்.
தமிழகத்திற்குக் காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டிய மிகப் பெரிய கடமை 40 எம்.பிக்களை கையில் வைத்துக் கொண்டுள்ள திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு உண்டு.
அப்படிப் பெற்றுத் தரத் தவறினால் திமுகவும், காங்கிரஸும் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications