கர்நாடகம் 45 டிஎம்சி நீர் விட வேண்டும்: பாஜக
பெரம்பலூர்:
தமிழகத்திற்கு கர்நாடகம் 45 டிஎம்சி தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று பாஜக அகில இந்திய செயலாளர் இல.கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
காவிரியிலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடக் கோரி பெரம்பலூரில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்குத் தலைமை வகித்த இல.கணேசன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காவிரியில் தற்போது வெறும் 3 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கர்நாடகம் திறந்துள்ளது. இது போதாது. 45 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அதில் எந்த மாற்றம் இல்லை.
குற்ற வழக்குகளின் பின்னணியில் உள்ளவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
தமிழகத்துக்குத் தண்ணீர் விடப்பதற்கு கர்நாடக பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications