6 ராஜ்யசபா வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
சென்னை:
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்குப் போட்டியிடும் 6 வேட்பாளர்களும் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அதி-முக சார்பில் டி.டி.வி.தினகரன், மலைச்சாமி, கோவிந்தராஜர், அன்பழகன் ஆகியோரும், பாமக சார்பில் அன்புமணி, காங்கிரஸ் சார்பில் சுதர்சன -நாச்சியப்பன் ஆகியோ--ரும் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் தவிர பத்மராஜன் என்ற சுயேச்சை வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனுவை யாரும் முன்மொழியாததாலும், டெபாசிட் தொகை அவர் கட்டாததாலும் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
எனவே 6 வேட்பாளர்களும் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவது உறுதியாகி விட்டது. இவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது வருகிற 21ம் தேதி -முறைப்படி அறிவிக்கப்படும்.
இதன்மூலம் ராஜ்யசபாவில் அதிமுகவின் பலம் 15 ஆக உயரும். லோக் சபாவில் அந்தக் கட்சிக்கு ஒரு எம்.பியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்யசபாவில் திமுகவின் பலம் ஆறில் இருந்து 2 ஆகக் குறையும்.












Click it and Unblock the Notifications