தொடரும் சலுகைகள்: மணல் விலை அதிரடி குறைப்பு !
சென்னை:
மக்களுக்கு அள்ளித் தரப்பட்டு வரும் சலுகைகளின் தொடர்ச்சியாக ஒரு லாரி லோடு மணலின் விலையை ரூ. 600 ஆகக் குறைத்துள்ளது தமிழக அரசு. இதுவரை இதன் விலை ரூ. 1,000 ஆக இருந்தது.
தமிழகத்தில் மணல் விற்பனையை இப்போது அரசே நேரடியாக மேற்கொண்டு வருகிறது.
ஒரு லாரி லோடு மணலின் விலையை ரூ. 1,000 ஆக அரசு நிர்ணயித்திருந்தது. விலை மிக அதிகம் என்பதால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் பொது மக்கள் மத்தியில் அதிருப்தியும் நிலவியது.
இந் நிலையில் மக்களவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வரும் சலுகைகளில் ஒன்றார் மணலின் விலை அதிரடியா ரூ, 400 குறைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், வரும் 19ம் தேதி முதல் விலை குறைப்பு அமலுக்கு வரும் என்றும் அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.