விஜய்காந்த் ரசிகர்கள்- பாமகவினர் அடிதடி
கடலூர்,விழுப்புரம் - திருவள்ளூர்:
திருவள்ளூரில் விஜய்காந்தின் கொடும்பாவியை எரித்த பாமக எம்.எல்.ஏ. ரவிராஜ் கைது செய்யப்பட்டார்.
கடலூரில் இன்று காலை விஜய்காந்த்தின் தலைமை ரசிகர் மன்றத்துக்கு தீ வைக்கப்பட்டது. புதுநகர் காவல் நிலையத்துக்கு எதிரே உள்ள இந்த மன்றத்துக்கு அதிகாலையில் தீ வைக்கப்பட்டது. இதில் அந்த மன்றம் முழுவதுமாக எரிந்து போனது.
இந் நிலையில் விழுப்புரத்தில் விஜய்காந்த் ரசிகர்களுக்கும் பா.ம.கவினருக்கும் இடையே அடிதடி நடந்தது.
பாமக எம்.எல்.ஏ கைது:
திருவள்ளூரில் காமராஜர் சிலை அருகே திருத்தணி எம்.எல்.ஏ. ரவிராஜ் தலைமையில் பா.ம.கவினர் விஜய்காந்தின் உருவப் பொம்மையை எரித்தனர். இதையடுத்து எம்.எல்.ஏவும் 20 பா.ம.கவினரும் கைது செய்யப்பட்டனர். திருப்போரூரிலும் விஜய்காந்தின் உருவப் பொம்மை எரிப்பில் பா.ம.கவினர் ஈடுபட்டனர்.
அடிதடி:
விழுப்புரம் அருகே திருக்கோவிலூரில் விஜய்காந்தைக் கண்டித்து பா.ம.கவினர் போஸ்டர் ஒட்டினர். அதன் அருகில் விஜய்காந்த் ரசிகர்கள் ராமதாஸைத் திட்டி பெயிண்டால் எழுதினர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. இருவரும் கல்வீசித் தாக்கிக் கொண்டனர். பின்னர் உருட்டுக் கட்டைகளால் அடித்துக் கொண்டனர். இதில் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications