வளைகுடா இந்தியர்களுக்கு உதவ புதிய திட்டம்
திருவனந்தபுரம்:
அரபு நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு உதவும் வகையில் அங்குள்ள இந்தியத் தூதரகங்களில் தொலைபேசி இணைப்புடன் கூடிய உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக வெளியுறவுத் துறை இணையமைச்சர் அஹ்மத் நிருபர்களிடம் கூறியதாவது:
அரபு நாடுகளில் வாழும் இந்தியர்கள் வருடத்துக்கு 7 பில்லியன் டாலர் அளவுக்கு அந்நிய செலவாணியை ஈட்டித் தருகிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தில் அவர்களின் பங்கை மத்திய அரசு நன்றாகவே உணர்ந்துள்ளது. அரபு நாடுகளில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்க்கும் கடமை மத்திய அரசுக்கு உள்ளது.
இதற்கு முதல் படியாக 24 மணி நேரமும் இயங்கும் தொலைபேசி வசதியுடன் கூடிய உதவி மையங்களை இந்தியத் தூதரகங்களில் அமைக்க உள்ளோம். அந்த மையங்களில் தமிழ், ஹிந்தி, உருது மற்றும் மலையாளம் தெரிந்த அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். இவர்களைத் தொடர்பு கொண்டு தங்களது பிரச்சனைகளை இந்தியர்கள் தெரிவிக்கலாம்.
மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வியாழக்கிழமையும் நேர்காணல் கூட்டங்கள் நடத்தப்படும். இதில் கலந்து கொண்டும் இந்தியர்கள் தங்களது பிரச்சனைகளைத் தெரிவிக்கலாம்.
வெளிநாடுகளில் இறக்கும் இந்தியர்களுக்கான இறப்புச் சான்றிதழை வழங்குவதற்கான கட்டணம் விலக்கிக் கொள்ளப்படும். இக் கட்டணத்தை இறந்தவருக்கு வேலை கொடுத்த நிறுவனம்தான் வழங்க வேண்டும். ஆனால், நடைமுறையில் இறந்தவரின் உறவினர்கள் தான் இதை செலுத்தி வருகின்றனர். எனவே இக் கட்டண முறை விலக்கப்படும என்றார்.












Click it and Unblock the Notifications