16,000 பேருக்கும் மீண்டும் வேலை: ஜெ. பல்டி
சென்னை:
பதவி நீக்கம் செய்யப்பட்ட 16,000 தாற்காலிக அரசு ஊழியர்களையும் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் இரவு தான் இந்த 16,000 பேரின் பதவிகளையும் தலைமைச் செயலாளர் மூலமாக உத்தரவு மூலமாகப் பறித்தார் ஜெயலலிதா. இதையடுத்து பெண் ஊழியர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். ஆண்கள் கலங்கிப் போய் நின்றனர்.
இவர்களது பரிதாப நிலைக்கு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அனுதாபம் ஏற்பட்டது.
இந் நிலையில் இன்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள உத்தரவில்,
பதவி நீக்கம் செய்யப்பட்ட தாற்காலிக ஊழியர்கள் தங்களை மீண்டும் பணியில் சேர்க்குமாறு கோரிக்கை வைத்தனர். தாற்கலிகமாகத் தான் இவர்கள் நியமிக்கப்பட்டார்கள் என்றாலும், அவர்களது கோரிக்கையை கருணையுடன் பரிசீலித்து அவர்களை மீண்டும் பணியில் சேர்க்குமாறு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
16,000 தாற்காலி ஊழியர்கள் திடீர் பணி நீக்கம்












Click it and Unblock the Notifications