பெங்களூரில் கருணாநிதி ஓய்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி 3 நாள் பயணமாக இன்று காலை பெங்களூர் புறப்பட்டுச் சென்றார்.
விமானம் மூலம் கிளம்பிய கருணாநிதி, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓய்வுக்காக பெங்களூர் செல்கிறேன். என் மகள் செல்வியின் வீட்டில் தங்கியிருப்பேன் என்றார்.
கர்நாடக முதல்வர் தரம்சிங்கை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு வாய்ப்பு உருவானால், வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என்று பதிலளித்தார்.
பெங்களூர் ஓய்வுக்குப் பின்னர் கருணாநிதி கோவா செல்லலாம் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு கோவாவில் தங்கியிருந்து தொல்காப்பிய உரையை கருணாநிதி எழுதியது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications