இராக்: கொரிய வாலிபர் தலையை வெட்டி கொலை
Subscribe to Oneindia Tamil
![]() |
| கொல்லப்பட்ட கிம் சும் மற்றும் தீவிரவாதிகள் |
அமெரிக்காவுக்கு நெருக்கமான தென் கொரியா இராக்குக்கு 3,000 பேர் கொண்ட படையை அனுப்பி வருகிறது தென் கொரியா. இதையடுத்து இராக்கில் கடந்த 9 மாதங்களாகப் பணியாற்றி வந்த கிம் சுன்னை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
அவரை விடுவிக்க வேண்டுமெனில் 24 மணி நேரத்தில் படைகளை தென் கொரியா வாபஸ் பெற வேண்டும் என கெடு விதித்தனர். இந்தக் கெடு நேற்று மாலை முடிவுக்கு வந்தது.
![]() |
| கிம் சுன் கொல்லப்பட்ட செய்தி கேட்டு கதறி அழும் பெற்றோர் |
ஆனால், இந்த மிரட்டலுக்குப் பணிய மாட்டோம் என தென் கொரியா அறிவித்துவிட்டது.
இந் நிலையில் நேற்றிரவு கிம்மை தீவிரவாதிகள் தலையை வெட்டிக் கொலை செய்தனர்.
அவரது உடலும் தலையும் பாக்தாத் நகருக்கு வெளியே தனித்தனியே கிடந்தன.














Click it and Unblock the Notifications