பொங்கல்: ரூ.174 கோடி இலவச வேட்டி, சேலை
காஞ்சிபுரம்:
வரும் பொங்கல் பண்டிகைக்கு ரூ.174 கோடி செலவில் இலவச வேட்டி சேலை வழங்குவதற்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு செய்து வருகிறது.
இதுகுறித்து கைத்தறித்துறை அமைச்சர் சோமசுந்தரம் கூறியதாவது:
பொங்கல் பண்டிகைக்கு ஏழை மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட நெசவாளர்கள் வேட்டி, சேலைகளைத் தயாரித்து வருகின்றனர்.
மொத்தம் ரூ.174 கோடி செலவில் 1.11 கோடி சேலைகளும், 1.11 லட்சம் வேட்டிகளும் விநியோகிக்கப்படவுள்ளது. பற்றாக்குறையைச் சமாளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் 2 லட்சம் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சீருடைகள் வழங்கும் பணியும் நடந்து வருகிறது என்று கூறினார்.
கடந்த மூன்றாண்டுகளாக இலவச, வேட்டி சேலைகள் வழங்குவதை தமிழக அரசு நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications