முத்திரைத் தாள்: சிபிஐ பிடியில் 4 தமிழக காக்கிகள்
டெல்லி
முத்திரைத் தாள் மோசடி வழக்கு தொடர்பாக 4 தமிழக காவல்துறை அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் வைத்து விசாரணை நடத்தினர்.
நாடு முழுவதையும் பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய முத்திரைத் தாள் மோசடி தொடர்பாக முக்கியக் குற்றவாளியான அப்துல் கரீம் தெல்கி ஏற்கனவே கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நாடு முழுவதும் ஏராளமான கூட்டாளிகள் உள்ளனர். அவர்களை படிப்படியாக சிபிஐ அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர். தமிழகத்திலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த நான்கு காவல்துறை அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூடுதல் டி.எஸ்.பிக்களான செல்வராஜ், சங்கர் மற்றும் 2 இன்ஸ்பெக்டர்களை சிபிஐ டெல்லிக்குக் கொண்டு சென்று விசாரித்து வருகிறது.
சிபிஐ கூடுதல் இயக்குநர் அருணா ராமசுந்தரம் தலைமையிலான அதிகாரிகள் குழு இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளது












Click it and Unblock the Notifications