மழையால் நின்ற விம்பிள்டன் டென்னிஸ்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
மழை காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கடந்த 21ம் தேதி தொடங்கியது. நேற்று நடைபெற இருந்த 3வது நாள்ஆட்டத்தின்போது பலத்த மழை கொட்டியது. நீண்ட நேரம் மழை பெய்ததால் மைதானத்தில் தண்ணீர் தேங்கிநின்றது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இன்று மழை நிலவரத்தைப் பொறுத்து ஆட்டம் நடைபெறும்.
முன்னணி வீரர்கள் காயம் காரணமாக ஆட்டத்திலிருந்து விலகியுள்ளதால் இந்த வருடம் விம்பிஸ்டன் சற்றுகுறைவான சுவாரசியத்துடன்தான் தொடங்கியது.












Click it and Unblock the Notifications