அரசு மருத்துவ கல்லூரிகளில் நடிக்கும் டாக்டர்கள்
சென்னை:
இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரத்திற்காக காத்திருக்கும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரிஅரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு, சென்னையிலிருந்து இரவோடு இரவாக 200க்கும் மேற்பட்ட டாக்டர்களைஅனுப்பியதால் தமிழக அரசு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.
திருநெல்வேலியில் இயங்கி வரும் மருத்துவக் கல்லூரிக்கு இன்னும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரம்கிடைக்கவில்லை. இதுதவிர தூத்துக்குடி, கன்னியாகுமரியில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசுநிர்மாணித்து வருகிறது.
இந்த மூன்று கல்லூரிகளிலும் இந்திய மருத்தவக் கவுன்சிலின் உயர் அதிகாரிகள் சோதனைக்கு வரவுள்ளனர்.ஆனால் மூன்று மருத்துவக் கல்லூரிகளிலும் போதிய டாக்டர்கள் இல்லை. பல பணியிடங்கள் காலியாகவேஉள்ளது. இவற்றை நிரப்ப தமிழக அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந் நிலையில் இந்திய மருத்துவக் கவுன்சில் சோதனை நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து என்ன செய்வது என்றுயோசித்த மருத்துவக் கல்வி இயக்குநரகம், சென்னை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 200 டாக்டர்களைசம்பந்தப்பட்ட 3 மருத்துக் கல்லூரிகளுக்கும் அனுப்பி அந்த கல்லூரிகளைச் சேர்ந்த டாக்டர்களாக "நடிக்க" வைக்கமுடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து புதன்கிழமை இரவு சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வெளியே 6 பேருந்துகளில் 200டாக்டர்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவக் கவுன்சில்சோதனை முடியும் வரை இவர்கள் அங்கேயே தங்கி இருப்பார்கள் என கூறப்படுகிறது.
தமிழக சுகாதாரத் துறையின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications