கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ஒத்திவைப்பு
சென்னை:
சென்னை மையிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பழம்பெரும் சிவ தலமான மையிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ஜூலை 5ம்தேதி நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந் நிலையில், கோவில்கும்பாபிஷேகம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோவில் திருப்பணிகள் இன்னும் முடிவடையாமல் உள்ளதால்கும்பாபிஷேகம் ஒத்திவைக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னர் கும்பாபிஷேக தேதி அறிவிக்கப்படும் என கோவில் நிர்வாகஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக ஆரம்பம் முதலே சர்ச்சை இருந்து வருகிறது. கோவில்கோபுரங்களில் பல வண்ணங்களைப் பூசுவதற்கு தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை தடை விதித்தது, ஒரேவண்ணத்தில் வர்ணம் பூசவும் அது உத்தரவிட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் பக்தர்கள் சார்பில் வழக்குத்தொடரப்பட்டு பின்னர் பல வர்ணங்களைப் பூச நீதிமன்றம் ஆணையிட்டது.
மேலும், இந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்தால் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் எனஅவரது ஆஸ்தான ஜோதிடர்கள் ஜெயலலிதாவை எச்சரித்ததாகவும் செய்திகள் வெளியாயின. இந்தச் சூழ்நிலையில்கும்பாபிஷேகம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications