ரஜினி பாணியில் மனம் திறக்கிறார் விஜய்காந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கஜேந்திரா ரிலீஸை மனதில் கொண்டு பா.ம.கவுடனான மோதலை தாற்காலிகமாக விஜய்காந்த் முடிவுக்குக்கொண்டு வந்திருந்தாலும், கட்சி தொடங்கும் திட்டத்தில் அவர் தீவிரமாக இருப்பதாகவே தெரிகிறது.
நாளை மறுதினம் (2ம் தேதி) தனது மன்றத்தின் முக்கியப் பொறுப்பாளர்களுடன் கோயம்பேட்டில் உள்ள தனதுஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார் விஜய்காந்த்.
மன்றங்களின் அனைத்து மாவட்டத் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், பா.ம.கவினருடன் மோதி கைதானவர்கள்ஆகியோரை 2ம் தேதி சென்னைக்கு வரச் சொல்லி உத்தரவும் அனுப்பியிருக்கிறார்.
இதையடுத்து இன்றே பல மாவட்ட ரசிகர்கள் சென்னையில் திரண்டு வருகின்றனர்.
மன்றத்தினருடன் விவாதிக்க பின்னர் ரஜினி பாணியில் நிருபர்களிடம் விஜய்காந்த் மனம் திறப்பார் என்றும்கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications