சென்னையில் குவியும் விஜயகாந்த் ரசிகர்கள்
சென்னை:
நாளை நடிகர் விஜயகாந்த் முக்கிய முடிவை அறிவிக்கப் போவதாக கூறப்படும் நிலையில் அவரது ரசிகர்கள் சென்னையில்ஏராளமான அளவில் குவிந்து வருகின்றனர்.
விஜயகாந்த், பாமகவினரிடையே ஏற்பட்ட பெரும் மோதல் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ள நிலையில் சென்னையில் தனதுரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விஜயகாந்த் நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கும் மன நிலையில் விஜயகாந்த்தும், அவரது ரசிகர்களும் இருக்கிறார்கள். இது தொடர்பாகஆலோசனை நடத்தி முடிவை அறிவிக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக சென்னைக்கு வருமாறு அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் தனிப்பட்ட முறையில் தொலைபேசி மூலம்அழைத்துள்ளார் விஜயகாந்த். இதையடுத்து நிர்வாகிகள் மட்டுமின்றி ரசிகர்களும் சென்னையில் குவிந்து வருகின்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள விஜய்காந்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தில் நாளை நடக்கிறது.
விஜயகாந்த்தின் வீடு, அலுவலகம் மற்றும் கல்யாண மண்டபப் பகுதிகளில் ரசிகர்கள் நேற்றே அலைமோத ஆரம்பித்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications