பி.இ. மாணவர் சேர்க்கை: கவுன்சிலிங் தொடக்கம்
சென்னை:
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 4 மையங்களில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்தொடங்கியது.
தமிழக பொறியியல் கல்லூரிகளில் உள்ள 41,000 மாணவர் இடங்களை நிரப்புவதற்காக இன்று முதல் இந்த கவுன்சிலிங் நடக்கிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி, கோவை அரசு பொறியியல் கல்லூரி, திருச்சி தேசியதொழில்நுட்பக் கழகம் ஆகிய இடங்களில் இந்தக் கவுன்சிலிங் நடக்கிறது.
முதல் நாளான இன்று உடல் ஊனற்ற மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. இதில் 184 பேர் கலந்து கொண்டனர். இவர்கள்அனைவருக்கும் அவர்கள் விரும்பிய கல்லூரிகளில் இடம் கொடுக்கப்பட்டது.
நாளையும், நாளை மறுநாளும் வெகேஷனல் பிரிவு பி.இ. கல்விக்கான கவுன்சிலிங் நடக்கிறது. திங்கள்கிழமை முதல் மற்ற மாணவர்களுக்குகவுன்சிலிங் நடக்கவுள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 41,000 பி.இ. சீட்களில் 7,000 சீட்கள் தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளால் அண்ணாபல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications