தமிழக பாஜக தலைவராகிறார் திருநாவுக்கரசர் !
டெல்லி:
முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவராக நியமிக்கப்படக் கூடும் என்று டெல்லியில் பேச்சுஅடிபடுகிறது.
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் தமிழக பாஜக நிர்வாகிகள் மட்டத்தில் பெரும் மாற்றம் மேற்கொள்ள அகில இந்திய பாஜகதலைமை முடிவு செய்துள்ளது.
முக்கிய மாற்றமாக தமிழக பாஜக தலைவராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை (ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர்) மாற்றி விட்டு புதியதலைவராக திருநாவுக்கரசரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருநாவுக்கரசர் சமீபத்தில்தான் மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் ஜெயலலிதாவையும், அதிமுக தலைமையையும் திருநாவுக்கரசர் மிகக் கடுமையாக சாடிவருகிறார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமானவரான திருநாவுக்கரசர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என்று வெளியாகியுள்ளசெய்திகள் அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
டெல்லியில் இது குறித்து திருநாவுக்கரசர் கூறுகையில், சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. எனவே அதற்குள் கட்சியைபலப்படுத்த போதுமான அவகாசம் உள்ளது.
வரும் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும். இல்லாவிட்டால் கெளரவமான கூட்டணியில் இடம் பெற வேண்டும்.
அதிமுகவுடன் ஏற்பட்டது போன்ற கூட்டணி மீண்டும் பாஜகவுக்கு அமையக் கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டதால்பாஜக தொண்டர்கள் பட்ட அவமானங்களுக்கும், கேவலங்களுக்கும் அளவே இல்லை.
தற்போது அதிமுகவுடன் கூட்டணி முடிந்து விட்டதால் பாஜக தொண்டர்கள் நிம்மதியாக உள்ளனர்.
2011ல் தமிழகத்தில் பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதே எனது லட்சியம். அதற்காக மிகக் கடுமையாக உழைக்கப் போகிறேன்என்றார் திருநாவுக்கரசர்.












Click it and Unblock the Notifications