பாஜக ஆதரவு 4 மாநில ஆளுநர்கள் அதிரடி நீக்கம்
டெல்லி:
உத்தரப் பிரதேசம், ஹரியாணா, குஜராத், கோவா மாநில ஆளுநர்கழை மத்திய அரசு இன்று பதவி நீக்கம் செய்துஉத்தரவிட்டுள்ளது. இவர்கள் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.வைச் சேர்ந்தவர்கள்.
முன்னதாக காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் இவர்கள் தாங்களாகவே பதவி விலகுவார்கள் என்று மத்தியஅரசு கருதியது. ஆனால், இவர்களை பதவி விலக வேண்டாம் என பா.ஜ.க. தலைமை கூறிவிட்டது.
இதையடுத்து இவர்களுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்துப் பார்த்தது. அப்போதும் இவர்கள் பதவிவிலகவில்லை.
இந் நிலையில் முன்னாள் துணைப் பிரதமர் அத்வானியுடன் பிரதமர் மன்மோகன் சிங் நேற்றிரவு தொலைபேசியில்பேசினார். அப்போது, இந்த நால்வரையும் பதவி விலகச் சொல்லுமாறு சிங் கேட்டுக் கொண்டார். ஆனால், அதைஅத்வானி நிராகரித்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஹரியாணா ஆளுநர் பாபு பரமானந்த், உத்தரப் பிரதேச ஆளுநர் விஷ்ணுகாந்த் சாஸ்திரி,கைலாஷ்பதி மிஸ்ரா, கோவா ஆளுநர் கேதார்நாத் சஹானி ஆகிய நால்வரும் இன்று பதவி நீக்கம்செய்யப்பட்டனர்.
இதற்கான உத்தரவை ஜனாதிபதி மாளிகை இன்று பிறப்பித்தது.
அதே நேரத்தில் ராஜஸ்தான் மாநில ஆளுநரும் முக்கிய பா.ஜ.க. தலைவருமான மதன்லால் குரானாநீக்கப்படவில்லை. 4 கவர்னர்கள் நீக்கப்பட்டுவிட்ட நிலையில், அவர் தானாகவே பதவி விலகுவார் என மத்தியஅரசு நம்புவதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications