மதுரை எல்.ஐ.சி. அதிகாரியும் சிக்கினார்
Subscribe to Oneindia Tamil
சென்னை & மதுரை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் மதுரையைச் சேர்ந்த எல்.ஐ.சி. நிர்வாக அதிகாரி ராமசாமி சாது என்பவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் சிபிசிஐடி டிஐஜி முகம்மது அலி, வரதட்சணை ஒழிப்புப் பிரிவு உதவி கமிஷ்னர் (முன்னாள் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்) சங்கர்ஆகியோரின் வீடுகளில் ரெய்ட் நடத்தி இருவரையும் சிபிஐ கைது செய்தது.
அதே போல மதுரையிலும் ரெய்ட் நடந்தது. எல்.ஐ.சி. மூத்த அதிகாரியான சாதுவின் வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள்அவரையும் கைது செய்து சென்னைக்குக் கொண்டு வந்தனர்.
தெல்கியிடம் போலி பத்திரங்களை வாங்கிப் பயன்படுத்துமாறு, எல்.ஐ.சி. ஏஜெண்டுகள் உள்ளிட்டவர்களை சாது நெருக்கியதாகவும்,இதற்காக சந்தூ கும்பலிடம் அவர் பல லட்சம் லஞ்சம் வாங்தியதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications