அலிக்கு வந்த நெஞ்சு வலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிபிஐ அதிகாரிகளால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட சிபிசிஐடி டிஐஜி முகம்மது அலி தனக்கு நெஞ்சுவலிப்பதாகக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரையும் உதவி கமிஷ்னர் சங்கர் மற்றும் எல்.ஐ.சி. அதிகாரி சாது ஆகியோரை ராயப்பேட்டைஅரசு மருத்துவமனைக்கு சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
அங்கு மூவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடந்தது. மூவரும் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள்அறிக்கை தந்தனர்.
இதையடுத்து பெருமூச்சு விட்ட சிபிஐ அதிகாரிகள், மூவரையும் மீண்டும் அடையாறில் உள்ள தங்களது தலைமைஅலுவலகமான மல்லிகை இல்லத்துக்கு அழைத்துச் சென்று இரவு முழுவதும் விசாரித்தனர்.
அரசியல்வாதிகள் ஸ்டைலில் நெஞ்சு வலி என்று சொல்லி மருத்துவமனையில் அட்மிட் ஆகி விசாரணையில்இருந்து தப்ப, முகம்மது அலி முயன்றதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications