பலியிடுதலை தடுக்க குட்டிச் சாமியார் முயற்சி?
சேலம்:
தினம் ஒரு சர்ச்சையில் சிக்கி வரும் சேலம் குட்டிச் சாமியார் பரணீதர சுவாமிகள் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சேலம் நகரமலை பகுதியில் ஆசிரமம் அமைத்துத் தங்கியுள்ள குட்டிச் சாமியார் அங்கு சிவலிங்கத்திற்கு பூஜைகளை செய்து வருகிறார்.
அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் ஆடு, கிடாக்களை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம்.
இந்ச் நிலையில் குட்டிச் சாமியார் சிவ வழிபாடு நடத்துவதால் காளியம்மன் கோவிலில் ஆடு, கிடாக்களை பலியிடக் கூடாது என்று தடைவிதிக்க பரணீதரனின் ஆசிரமத்தினர் முடிவு செய்திருப்பதாகவும், கோவிலுக்கு வந்து ஆடு, கிடா பலியிடுபவர்களை தடுத்து நிறுத்தப்போவதாகவும் அப் பகுதியில் செய்திகள் பரவின.
இதனால் நகரமலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பலியிடுவதைத் தடுக்க இவர் யார் என அப் பகுதி மக்கள் மத்தியில் கொந்தளிப்புஏற்பட்டது.
இந் நிலையில் குட்டிச் சாமியார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வழிபாட்டு முறை உள்ளது. மனிதநம்பிக்கையின் அடிப்படையில்தான் இந்த வழிபாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
எனவே, காளியம்மன் கோவில் வழிபாட்டு முறையில் தலையிட எனக்கு உரிமை இல்லை. தனி மனித நம்பிக்கையில், வழிபாட்டு முறையில்நான் தலையிட மாட்டேன். யாருடைய மனதையும் நான் புண்படுத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
குட்டி சாமியாரை வைத்து இன்னும் என்னென்ன பிரச்சனைகள் எழப் போகின்றனவோ தெரியவில்லை.












Click it and Unblock the Notifications