அரசு மதுக்கடைகளை மூட பாஜக கோரிக்கை
சென்னை:
தமிழகத்தில் அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
பாஜகவின் மாநில மகளிர் அணி செயற்குழு கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில்கட்சியின் அகில இந்திய தலைவர் வெங்கையா நாயுடு, மாநில மகளிர் அணித் தலைவி லலிதா சுபாஷ்,பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:
வன்முறையைத் தூண்டும் மதுப்பழக்கத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காமல் மாநில அரசே மதுக்கடைகள்நடத்துவதை ஏற்க முடியாது. தமிழகத்தில் அரசு மதுக்கடைகளை மூடி விட்டு பூரண மதுவிலக்கைஅமல்படுத்தப்படவேண்டும்.
ஈவ் டீசிங்குக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
கர்நாடக இசை மேதை எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரால் ஒரு விருதை ஏற்படுத்தி சிறந்த இசைக் கலைஞர்களுக்குஆண்டுதோறும் தமிழக அரசு விருது வழங்க வேண்டும்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டமசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.
ரத்தசோகை, கர்ப்பப்பை கோளாறுகளை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்து ஆலோசனை தரும் விதமாக பிளஸ் டூமாணவிகளுக்கு பள்ளிகளில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications