சென்னை விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு !
சென்னை:
மும்பையிலிருந்து சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கப் போகும் ஒரு விமானத்தில் மனிதவெடிகுண்டு ஒருவர் வந்திறங்கப் போவதாக மர்ம தொலைபேசி மிரட்டல் வந்தததையடுத்து பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இன்று அதிகாலை இந்த மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், மும்பையில் இருந்து நாகராஜ் என்ற நபர் உடலில் குண்டுகளைக் கட்டிக்கொண்டு விமானத்தில் வந்து கொண்டிருப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
இதையடுத்து போலீசாரை உஷார்படுத்திய விமான நிலைய அதிகாரிகள், சோதனையில்ஈடுபட்டனர். மும்பையிலிருந்து வந்த விமானம், அதில் வந்த பயணிகளும் மிகத் தீவிரமாகசோதனையிடப்பட்டனர். ஆனால் தொலைபேசி தகவலில் கூறியபடி யாரும் வரவில்லை.
அந்தத் தொலைபேசி அழைப்பு கோயம்பேடு பகுதியில் உள்ள எஸ்.டி.டி. பூத்தில் இருந்துவந்துள்ளது. இதை காலர் ஐடி மூலம் கண்டுபிடித்த போலீசார் அந்த பூத்துக்கு விரைந்தனர். ஆனால்,அது பூட்டப்பட்டிருந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications