கற்பக விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
பிள்ளையார்பட்டி:
காரைக்குடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர்திருக்கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் யாக கால பூஜைகள் நடந்து வந்தன.
இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ராஜகோபுரம், பிற விமானங்களில் புனித நீர்தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.
இந் நிகழ்ச்சியில் குன்றக்குடி அடிகளார், திருப்பானந்தாள் சுவாமிகள், தர்மபுரம் ஆதீனம்,திருவாடுதுறை ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்க தமிழகம் தவிர மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா உள்பட பல நாடுகளில்இருந்தும் ஏராளமான பக்தர்கள் பிள்ளையார்பட்டியில் குவிந்துள்ளனர்.
இன்று மாலை மகா உற்சவமும், மூர்த்தி வீதி உலாவும் நடைபெறுகிறது. இதில் 4 லட்சம் பக்தர்கள் வரைபங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிள்ளையார்பட்டியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications