நகைகள் பறி கொடுத்தவரை அசத்திய போலீஸ்
சென்னை:
கொள்ளையடிக்கப்பட்ட 53 பவுன் நகைகளை சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கே சென்று கொடுத்து அசத்திவிட்டனர்சென்னை போலீஸார்.
சென்னை கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள குடியிருப்பில் வசிப்பவர் சத்யலட்சுமி. இவர்முதுகெலும்பில் அடிபட்டு நடமாட முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார்.
தனியாக வசித்து வரும் இவருக்கு வேலைக்காரப் பெண் ஒருவர் மட்டுமே துணையாக உள்ளார்.
சில வாரங்களுக்கு முன் வேலைக்காரப் பெண் வெளியில் சென்றிருந்த நிலையில், வீட்டுக்குள் புகுந்த சிலர்சத்யலட்சுமியிடம் இருந்து பீரோ சாவியைப் பறித்து, அதில் இருந்த 53 பவுன் நகைகளை அவரது கண் முன்பாகவேதிருடிச் சென்றனர்.
படுத்த படுக்கையாகக் கிடக்கும் சத்யலட்சுமியால் அதைத் தடுக்கவோ, உதவி கோரி சத்தம் எழுப்பவோ கூடமுடியவில்லை.
சம்பவம் குறித்து தனது வேலைக்காரப் பெண் மூலமாக கீழ்ப்பாக்கம் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். போலீசார்தீவிர விசாரணை நடத்தி திருடனைக் கண்டுபிடித்து நகைகளை மீட்டனர்.
சத்யலட்சுமியின் உறவினர் முரளி என்பவன் சொல்லித் தான், அந்தத் திருடன் நகைகளைக் கொள்ளையடித்தான்என்றும் தெரிய வந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட நகைளை இணை ஆணையர் சைலேந்திரபாபுவும் கீழ்பாக்கம் போலீசாரும்சத்யலட்சுமியின் வீட்டிற்கே சென்று அவரிடம் கொடுத்தனர்.
போலீஸாரின் இந்த நடவடிக்கையால் சத்யலட்சுமி நெகிழ்ந்து போனார்.
இனிமேல் திருடு போய் பறிமுதல் செய்யப்படும் நகைகள், சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்றுகொடுக்கப்படும் என்று சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications