வீரப்பன் கூட்டாளிகளின் கருணை மனு தள்ளுபடி?
பெங்களூர்:
தங்களது தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு வீரப்பனின் 3 கூட்டாளிகள் கொடுத்துள்ள கருணைமனுவை நிராகரிக்குமாறு கவர்னருக்கு கர்நாடக அரசு பரிந்துரை செய்துள்ளது.
பாலாறு காட்டுப் பகுதியில் கடந்த 1990ம் ஆண்டு கர்நாடக போலீசாரின் வாகனங்களை கண்ணிவெடி வைத்து தகர்த்தான் வீரப்பன். அதில் 22 போலீசாரும் அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் வீரப்பனுக்கு உதவி புரிந்ததாக சைமன், ஞானப்பிரகாஷ், மீசேகர் மாதையாஆகியோரை கர்நாடக போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்தது. உச்ச நீதிமன்றமும் சமீபத்தில் இந்த தண்டனையை உறுதி செய்தது.
இந்த தண்டனையை ரத்து செய்து, அதை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரி மூவரின் சார்பிலும்ஜனாதிபதியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் சார்பில் கருணை மனுவை சமூக நலஅமைப்பு ஒன்று கர்நாடக ஆளுநர் சதுர்வேதியிடம் கொடுத்துள்ளது.
அவர் ஜனாதிபதிக்கு இந்த மனுவை அனுப்பவுள்ளார்.
இந் நிலையில் இன்று கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது.அதில், கருணை மனுவை நிராகரிக்குமாறு ஆளுநருக்கு கோரிக்கை விடுப்பது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications