கள்ளத் தொடர்பு: பண்ணையாரை கொன்ற விவசாயி
மதுராந்தகம்:
தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பண்ணையாரை விவசாயி அடித்தே கொன்றார்.
மதுராந்தகம் அருகே உள்ள பொற்பணங்கருணை கிராமத்தைச் சேர்ந்தவர் பண்ணையார் ஆறுமுகம்(45). நிலக்கிழாரான இவரது நிலத்தில், நாகப்பனும் (40), அவரது மனைவி கோவிந்தம்மாவும் (34)கூலித் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.
அப்போது கோவிந்தம்மாவுடன் பண்ணையாருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்தநாகப்பன் மனைவியை கண்டித்தும் பலனில்லாமல் போகவே பஞ்சாயத்தில் புகார் செய்தார்.
ஆனாலும், பண்ணையாரும் கோவிந்தாவும் கட்டுப்படவில்லை. இருவரும் உல்லாசமாக இருந்ததைநேரில் பார்த்த நாகப்பன், மரக்கட்டையால் பண்ணையார் ஆறுமுகத்தையும் மனைவியையும்தாக்கினர்.
இதில் பண்ணையார் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். சினிமா போல நடந்த இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications