அறிவாலயம்: மாநகராட்சிக்கு கருணாநிதி பதில்
சென்னை:
அண்ணா அறிவாலயம் முன்புள்ள காலியிடம் தொடர்பான பிரச்சினையில் சென்னை மாநகராட்சிக்கு விரிவானபதில் அனுப்பப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில, அண்ணா அறிவாலய காலியிடம் தொடர்பான சர்ச்சையில்திமுக அறக்கட்டளைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்திற்கு தலைவர் என்ற முறையில் நான் பதில்அனுப்பியுள்ளேன்.
பெரியார், அண்ணாவின் சீடர்களுக்கு சோதனைகள் வருவது சகஜமானதுதான். அதை சமாளிக்கும்பக்குவத்தையும் பெரியாரும், அண்ணாவும் எங்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். அந்த வரிசையில் இதையும்சமாளிப்போம்.
தமிழக காவல்துறை அதிகாரிகள் மீதான சிபிஐயின் நடவடிக்கையில் எங்களைத் தொடர்புபடுத்தி செய்திகள்வருவது தவறு. இதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இது சட்டப்படியான, நாடு தழுவியநடவடிக்கையாகும் என்றார்.












Click it and Unblock the Notifications