இந்தியா: 64.8 சதவீதத்தினருக்கு கல்வியறிவில்லை
டெல்லி:
இந்தியாவின் 64.8 சதவீத மக்கள் கல்வியறிவில்லாதவர்கள் என்று சென்சஸ் ஆய்வில் தெரியவந்துள்ளது.
2001ம் ஆண்டு சென்சஸ் கணக்கின் விவரம்:
உத்தரப் பிரதேசம் தான் நாட்டிலேயே மிக அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிரம் உள்ளது.
தேசிய அளவில் கல்வியறிவு பெற்ற ஆண்களின் விகிதம் 75.3 சதவீதமாகவும், பெண்கள் விகிதம்53.7 சதவீதமாகவும் உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ஆண்களில் கல்வி விகிதம் 11 சதவீதமும் பெண்களின் கல்வி விகிதம் 14.4சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் மக்கள் தொகை 16.6 கோடியாக உள்ளது. இது பாகிஸ்தானின் மக்கள்தொகையை விட அதிகம். மகாராஷ்டிரத்தின் மக்கள் தொகை 9.7 கோடியாகவும் பிகாரின் மக்கள்தொகை 8.3 கோடியாகவும் உள்ளது.
லட்சத்தீவுகள் தான் நாட்டிலேயே குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாக (யூனியன்பிரதேசம்) உள்ளது. இங்கு மக்கள் தொகை 61,000.
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் மக்கள் தொகை 18.2 கோடி அதிகரித்துள்ளது.
தேசிய அளவில் 1000 ஆண்களுக்கு 927 பெண்கள் உள்ளனர். இது கடந்த சென்சசில் 945 ஆகஇருந்தது. இதனால் பெண் குழந்தைகளைக் கொல்வது இன்னும் தொடர்ந்து வருவது உறுதியாகிறது.
நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 16.2 சதவீதமாகவும், பழங்குடியினரின்எண்ணிக்கை 8.2 சதவீதமாகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications