நெல்லையை கலக்கும் மதிமுக பொதுக் குழுக் கூட்டம்
நெல்லை:
மதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம் இன்று திருநெல்வேலியில் தொடங்கியது.
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டு வெளியில் வந்த பின் நடக்கும் முதல் மதிமுகபொதுக் குழுக் கூட்டம் இது. 3 நாட்கள் நடக்கும் இக் கூட்டத்தை மாநாடு போல நடத்தத்திட்டமிட்டு பிரம்மாண்ட ஏற்பாடுகளை மதிமுக செய்துள்ளது.
தாழையூத்தில் 24 ஏக்கர் பரப்பில் மாபெரும் பந்தல் அமைக்கப்பட்டு இந்த நிகழ்ச்சி நடக்கிறது.மாநிலம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் நிர்வாகிகளும் இதில்பங்கேற்றுள்ளனர்.
இன்று காலை தொடங்கிய பொதுக் குழுக் கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக வைகோ தலைமையில்மதிமுக உயர் நிலைக் கூட்டம் நடந்தது. மாலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது.
ஆகஸ்டு மாதத்தில் தான் தொடங்கவுள்ள நடை பயணம், கட்சியின் எதிர்காலத் திட்டங்கள், 2006ம்ஆண்டு சட்டமன்றத் தேர்தல் ஆகியவை குறித்து கட்சியினருடன் வைகோ ஆலோசனைநடத்தவுள்ளார்.
திங்கள்கிழமை பொதுக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியையொட்டி திருநெல்வேலி முழுவதும் மதிமுக கொடிகள், தோரணங்கள்,வளைவுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications