கும்பாபிஷேகங்கள்: மீண்டும் பணிந்தார் ஜெ.
சென்னை:
பிள்ளையார்பட்டி கோவிலைத் தொடர்ந்து பிற கோவில்களின் கும்பாபிஷேகங்களையும் இந்த ஆண்டேநடத்திவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
முதலில் பிள்ளையார்பட்டி விஷயத்தில் பக்தர்களிடம் பணிந்த அணிந்த இப்போது பிற கோவில்கள் விஷயத்திலும்இறங்கி வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 83 கோவில்களில் இந்த ஆண்டுகும்பாபிஷேகம் நடத்தப்படும் என அரசு அறிவித்தது. இதையடுத்து கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைகோவில் நிர்வாகிகள் செய்தனர்.
ஆனால், திடீரென அதை அடுத்த வருடத்துக்குத் தள்ளி வைத்தது அரசு. முதல்வர் ஜெயலலிதாவின் நலனைக்கருத்தில் கொண்டு அவரது ஜோதிடர்கள் வழங்கிய அறிவுரையையடுத்து கும்பாபிஷேகங்களை அரசு தள்ளிவைத்ததாக புகார் எழுந்தது.
இந் நிலையில் பிள்ளையார்பட்டி கோவில் நிர்வாகிகள், திட்டமிட்டபடி கும்பாபிஷேகத்தை நடத்தியே தீருவோம்என அறிவித்தனர். அவர்களை அறநிலையத்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டரை வைத்து மிரட்டியும்சமாதானப்படுத்தியும் பார்த்தது அரசு.
ஆனால், கோவிலை நிர்வகித்து வரும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் இந்த விவகாரத்தை ஜனாதிபதிஅப்துல்கலாம் மற்றும் நீதித்துறையில் உயர் மட்டத்தில் உள்ள செட்டியார் சமூக விவிஐபிக்களின் கவனத்துக்குஎடுத்துச் சென்றனர்.
நிலைமை தங்களை மீறிப் போவதை உணர்ந்த அரசு, பிள்ளையார்பட்டி கோவிலில் மட்டும் கும்பாபிஷேம் நடத்தஅனுமதி தந்தது. இதையடுத்து நேற்று முன் தினம் படுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.
இந் நிலையில் பிற கோவில் நிர்வாகிகளும் பக்தர்களும் அங்கும் உடனே கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் எனஅரசுக்கு நெருத்தல் தந்தனர். கும்பாபிஷேகத்துக்கு தேதியை அறிவித்துவிட்டு அதை ஒத்திவைப்பு நல்லதல்ல எனபல ஆன்மிகத் தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.
விட்டால், உத்தரவையும் மீறி கும்பாபிஷேகம் நடத்திவிடுவார்கள் என்று அஞ்சிய தமிழக அரசு பிற முக்கியக்கோவில்களின் கும்பாபிஷேகத்தையும் உடனடியாக நடத்த அனுமதித்துள்ளது.
இதன்படி அடுத்த ஆண்டுக்குத் தள்ளிவைக்கப்பட்ட மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், வரும்ஆகஸ்ட் 30ம் தேதியன்று நடக்கும்.
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் ஆகஸ்ட் 22ம் தேதியும், குணசீலம் பிரசண்ண வெங்கடேச பெருமாள்கோவில், திருச்சி, அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஆகஸ்ட் 27ம் தேதியும் கும்பாபிஷேகம்நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிலெடுத்தாலும் காலையில் ஒரு உத்தரவு, மாலையில் ஒரு உத்தரவு என புரட்சி செய்து கொண்டிருக்கும் தமிழகஅரசு கோவில்கள் போன்ற பக்தர்களின் சென்சிட்டிவான விஷயங்களிலாவது நன்றாக சிந்தித்து, தீர்க்கமானமுடிவுகளை எடுக்கலாம்.












Click it and Unblock the Notifications