பொடாவை நீக்க அத்வானி கடும் எதிர்ப்பு
பெங்களூர்:
தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட பொடா சட்டத்தை நீக்கக் கூடாது என முன்னாள்துணைப் பிரதமர் அத்வானி கூறியுள்ளார்.
பெங்களூர் இன்று பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய அத்வானி,
தீவிரவாதிகளை ஒழிக்கவும், தீவிரவாதத்துக்கு உதவும் நிதியை முடக்கவும் இந்தச் சட்டம் மிக, மிகஅவசியம். ஆனால், காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தவுடன் வெளியிட்ட முதல் அறிவிப்பேபொடாவை நீக்குவோம் என்பது தான்.
பொடாவை நீக்குவது குறித்து, தீவிரவாதிகளை தினந்தோறும் சந்தித்து வரும் ராணுவம், பாராமிலிட்டரிப் படைகள், போலீசார் ஆகியோருடன் மத்திய அரசு முதலில் ஆலோசனை நடத்தவேண்டும்.
தங்களது உயிரையும் கொடுத்து தீவிரவாதத்தை சந்தித்து வரும் படைகள் இவை. இந் நிலையில்தீவிரவாதிகளை ஒழிக்கக் கொண்டு வந்த சட்டத்தை நீக்கப் போகிறீர்களா?
பொடா தவறாகப் பயன்படுத்தப்பட்டதும் உண்மை தான். இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) கூடத்தான் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக அதை நீக்கிவிட முடியுமா?
பொடாவை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க பல நடைமுறைகளை நாங்கள் கொண்டுவந்தோம். பொடா இல்லாவிட்டால் பலரை தண்டித்திருக்கவே முடியாது என்றார் அத்வானி.












Click it and Unblock the Notifications