ஜெ. காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார்: வாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்தாமல் அரசியல் பழிவாங்க, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் முதல்வர்ஜெயலலிதா செயல்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் கூறியுள்ளார்.

நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

மத்திய அரசின் பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்தரும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் சிலபா.ஜ.க. தலைவர்களும், ஜெயலலிதாவும் அரசியல் உள்நோக்கத்துடன் இதை குறை கூறி உள்ளனர்.

மக்கள் நலனில் முந்தைய பா.ஜ.க. அரசுக்கு அக்கறை இல்லை. இதனால்தான் பலமுறை வற்புறுத்தியும் சென்வாட்வரியை அவர்கள் நீக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் சென்வாட் வரியை நீக்கிநெசவாளர்களின் வாழ்வில் ஒளிபிறக்க வைத்துள்ளோம்.

அன்னிய முதலீடு குறித்து கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டு தெரிவித்துள்ள எதிர்ப்பு குறித்து சரியான முறையில்பேசி நல்ல தீர்வு காணப்படும்.

ஆளுநர்களை நீக்க மத்திய அரசுக்கு சகல அதிகாரமும் இருக்கிறது. தமிழக ஆளுநர் பற்றிய எங்கள் கருத்துக்களைகாங்கிரஸ் மேலிடத்திற்கு நாங்கள் தெரிவிப்போம்.

போலி முத்திரைத்தாள் மோசடியில் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச் சாட்டுகள்சரியானவை அல்ல என்பது என் கருத்து. மனநிலை சரியில்லாத சில அதிகாரிகள் இது போன்ற புரளிகளைக்கிளப்பி விடுகிறார்கள்.

பெரியார் அறக்கட்டளை மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருப்பது கண்டிக்கத்தக்கது. அரசியல் காழ்ப்புணர்ச்சிகாரணமாக இந்த வழக்கை தமிழக அரசு தொடர்ந்துள்ளது. மக்கள் நலத் திட்டங்களில் முழுமையாக அக்கறைசெலுத்தாமல் இது போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு தொடர்ந்து அக்கறை காட்டினால்இனிவரும் தேர்தல்களிலும் இந்த அரசை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+