ரூ. 20 கோடி பணம்: கருத்து கூற ரஜினி மறுப்பு
மைசூர்:
நடிகர் ராஜ்குமார் மீட்பின்போது, போலி முத்திரைத் தாள் மோசடி மன்னன் அப்துல் கரீம் டெல்ஜியின் பணம்தனது மேலாளர் மூலமாக பரிவர்த்தனை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்துக் கருத்துக் கூற நடிகர்ரஜினிகாந்த் மறுத்து விட்டார்.
போலி முத்திரைத் தாள் மோசடி மன்னன் டெல்ஜியிடமிருந்து ரூ. 20 கோடி பணத்தைப் பெற்று, நடிகர்ரஜினிகாந்த்தின் மேலாளர் மூலமாக வீரப்பனுக்கு கொடுக்கப்பட்டதாக இந்த வழக்கில் கைதாகியுள்ள கர்நாடகமுன்னாள் காவல்துறை அதிகாரி சங்கர் ராம் சிங் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அப்போதைய கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் வலியுறுத்தல் காரணமாக, ராஜ்குமாரை மீட்பதற்காகடெல்ஜியிடமிருந்து பணம் பெற்று அதை ரஜினி மேலாளர் மூலமாக வீரப்பனுக்குக் கொடுத்ததாகவும் அவர்தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி குறித்து ரஜினி தரப்பிலிருந்து இதுவரை விளக்கம் எதுவும் வரவில்லை. இந் நிலையில் மைசூரில்உள்ள சாமுண்டேஸ்வரி கோவிலுக்கு ரஜினிகாந்த் தரிசனம் செய்ய வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்கள் இதுகுறித்து ரஜினியிடம் கேட்டபோது, கர்நாடக முன்னாள் காவல்துறை அதிகாரிசங்கர்ராம் சிங் கூறியது குறித்து எனக்குத் தெரியாது, நான் அந்த செய்திகளைப் படிக்கவும் இல்லை.
இது ஒரு வழக்கு. விசாரணை நடந்து வருகிறது, நீதிமன்றத்தில் உள்ளது. எனவே இந்த சமயத்தில் நான் இதுகுறித்துகருத்து கூற முடியாது என்று கூறி விட்டு சென்று விட்டார் ரஜினிகாந்த்.












Click it and Unblock the Notifications