மருத்துவ கல்லூரி விவகாரம்: அன்புமணிக்கு ராமதாஸ் ஆதரவு
சென்னை:
தூத்துக்குடி, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கவும், நெல்லை மருத்துவக் கல்லூரிக்குகூடுதலாக 50 சீட்கள் வழங்கவும், இந்திய மருத்துவக் கவுன்சில் மறுத்துள்ள விவகாரத்தில், சுகாதாரத் துறைஅமைச்சர் அன்புமணி தலையிட்டு தமிழக நலனைக் காப்பார் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும்,அன்புமணியின் தந்தையுமான ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிகளுக்குஅங்கீகாரம் வழங்க இந்திய மருத்துவக் கவுன்சில் மறுத்து விட்டது. அதேபோல, நெல்லை மருத்துவக் கல்லூரியில்கூடுதலாக 50 மாணவர் இடங்களை அனுமதிக்கவும் அது மறுத்து விட்டது. இதனால் தமிழகத்திற்கு கூடுதலாக 250சீட்கள் கிடைக்க இருந்தது பறிபோயுள்ளது.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் நடவடிக்கையை தமிழக அரசு கடுமையாக சாடியுள்ளது. மேலும், மத்தியசுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் பாமகவின் அன்புமணி, தமிழக நலனைக் கருத்தில் கொண்டு இந்தவிவகாரத்தில் தலையிடாமல் அலட்சியம் காட்டுவதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.
இந் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய மருத்துவக் கவுன்சில் என்பதுஒரு சுயேச்சை அமைப்பு. இதில் மத்திய சுகாதாரத் துறை தலையிட முடியாது. இருப்பினும், தமிழக நலன்கருதியும், இட ஒதுக்கீட்டுக் கொள்கையை காக்கவும், இப்பிரச்சினையில் தலையிட அன்புமணி முடிவுசெய்துள்ளார்.
பாங்காக் சென்றுள்ள அன்புமணியிடம் பேசினேன். 250 சீட்களைப் பெறுவதில் அவர் மிகவும் ஆர்வமாக உள்ளார்.
தொழுநோய் தொற்று நோய் என்று நாடாளுமன்றத்தில் அன்புமணி பேசியதில் தவறில்லை. அது தொற்று நோய்தான் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications