சேலம் அருகே உயிருடன் புதைந்து 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் அருகே மண் தோண்டிக் கொண்டிருந்தபோது 3 பேர் உயிருடன் புதைந்து இறந்தனர். ஒருவர் உயிருடன்மீட்கப்பட்டார்.
சேலம், எடப்பாடி அருகே உள்ள அடயூர் அம்மன்கோவில்காடு என்ற கிராமத்தில் குவார்ட்ஸ் கற்களைதிருட்டுத்தனமாக சிலர் தோண்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக 4 பேர் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து தீயணைப்புப்படையினருக்குத் தகவல் தரப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு முயற்சிகளை மேற்கொண்டனர்.ஆனால் ஒருவரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. மற்ற 3 பேரும் பரிதாபமாக இறந்து விட்டனர்.












Click it and Unblock the Notifications