தமிழகத்தில் 2011ல் பாஜக ஆட்சி: திருநாவுக்கரசர்
புதுக்கோட்டை:
தமிழகத்தில் 2011ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைக்கும் என்று மாநிலங்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர்கூறினார்.
புதுக்கோட்டை மாவட்ட பாஜக செயற்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணிதான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றநம்பிக்கை அப்போதைய எதிர்க்கட்சியினருக்கும் இருந்தது. திமுக தலைவர் கருணாநிதி கூட தமிழகத்தில்ஜனநாயக முற்போக்கு கூட்டணி பெரும்பான்மை இடத்தை பிடித்தாலும் மத்தியில் தேசிய ஜனநாயககூட்டணிதான் ஆட்சியை பிடிக்கும் என நினைத்திருப்பார்.
ஆனால் தேர்தல் முடிவு பாஜகவிற்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது. இதற்கு காங்கிரஸ் அலையோ, சோனியாஅலையோ என்று கருத முடியாது. ஏனென்றால் கேரளா மற்றும் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைசந்தித்துள்ளது.
தமிழகத்தில் ஆளுங்கட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகள் காரணமாகத்தான் மக்களவைத் தேர்தலில் தேசியஜனநாயக கூட்டணி தோல்வியடைந்தது. தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்திருந்தால் ஒருதொகுதியையாவது கைப்பற்றி இருக்கலாம்.
மத்திய அரசு முரண்பாடான கொள்கைகளை கொண்ட கட்சிகளை கூட்டணியில் வைத்துக் கொண்டுள்ளதால்இன்னும் 2 ஆண்டுகளில் கவிழ்ந்து விடும். இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளைத்தான் இடதுசாரிஇப்போதே துவங்கியுள்ளது.
தமிழகத்தில் 2011ம் ஆண்டு பாஜக ஆட்சியமைக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications