விஜயகாந்த்தைக் கண்டித்து போஸ்டர்கள்
சென்னை:
சென்னையில் நடிகர் விஜயகாந்த்தைக் கண்டித்து நடிகர் சங்க சுவர் உள்ளிட்ட சில பகுதிகளில் திடீர் போஸ்டர்கள்தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இயக்குநர் பாரதிராஜாவுக்கும், நடிகர் விஜயகாந்த்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றுவதற்கு விஜயகாந்த்தின்மொழிப் பற்று தடுப்பதாக பாரதிராஜா கடுமையாக சாடியிருந்தார். மேலும் கலை நிகழ்ச்சிகளுக்கு நடிகர்,நடிகைகளை விஜயகாந்த் தடை செய்வதாகவும் சாடியிருந்தார்.
இதற்கு பதிலளித்த விஜயகாந்த், பாரதிராஜாவின் புகாருக்கு எல்லாம் பதில் தர வேண்டிய அவசியம் இல்லை என்றுகாட்டமாக தெரிவித்திருந்தார்.
இந் நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க வளாக சுவற்றில் திடீர் என்று சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.அதில், பச்சைத் தமிழன் பாரதிராஜா வாழ்க, தேர்தலே நடத்தாமல் கோல்மால் செய்து தலைவரான தெலுங்கர்விஜயகாந்த்தே, தமிழ் நடிகர்கள் ரத்தத்தைக் குடித்து நாடாளத் துடிக்கும் உனக்கு, நடிகர் சங்கத் தலைவர் பதவி ஒருகேடா... உடனே ராஜினாமா செய். தமிழ் நடிகர்களே.. தூங்கியது போதும். விழித்தெழுங்கள் என்றுகூறப்பட்டிருந்தது.
பாரதி தமிழ் பேரவை என்ற பெயரில் இதுபோன்ற போஸ்டர்கள் வடபழனி, கோடம்பாக்கம், விருகம்பாக்கம்உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருந்தது. பாமகவினர் இதற்குப் பின்னணியில் இருக்கலாம் என்றுவிஜயகாந்த் ரசிகர்கள் சந்தேகப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications