அமெரிக்காவிலிருந்து திரும்பிய நாமக்கல் இளைஞர் மரணம்
Subscribe to Oneindia Tamil
சேலம் :
அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய நாமக்கல் இளைஞர் சேலத்திலுள்ள ஒரு ஹோட்டல் அறையில் மர்மமானமுறையில் இறந்து கிடந்தார்.
அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் நகரில் ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராகபணிபுரிபவர் ரவிக்குமார் (27). இவர் கடந்த 4 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சிலநாட்களுக்கு முன் இவர் இந்தியா திரும்பினார் .
இந் நிலையில் சேலத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் . தகவல்அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து பிணத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications