இந்துக்களை அவமதிக்கிறார் டி.ஆர். பாலு: பா.ஜ.க

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு இந்துக்களை அவமதித்து வருவதாக பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

முத்திரைத்தாள் மோசடியில் சிபிஐ ஆழமாகவும் அரசியல் தலையீடுகளை அனுமதிக்காமலும் விசாரிக்க வேண்டும்என்றார்.

அப்போது அவரை இடைமறித்த நிருபர்கள், ரஜினியின் மேனேஜர் மூலம் முத்திரைத் தாள் மோசடி மன்னன்தெல்கியிடம் இருந்து ரூ. 20 கோடி பெறப்பட்டு வீரப்பனுக்குத் தரப்பட்டதாக சொல்கிறார்களே? என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த ராதாகிருஷ்ணன், நான் யார், யார் என்று கூறவில்லை. யாராக இருந்தாலும் சிபிஐ நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று தான் சொல்கிறேன் என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில்,

திமுக தலைவர் கருணாநிதியும் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவும் இந்துக்களை தொடர்ந்து அவமதித்துவருகின்றனர். கடவுள் மறுப்பு, இந்துவாகப் பிறந்ததற்கு அவமானப்படுகிறேன் என்று பாலு பேசியுள்ளார். இதுகண்டிக்கத்தக்கது. இதை தேர்தலுக்கு முன் பாலு பேசியிருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட பேச்சை பிற மதத் தலைவர்கள் இருக்கும கூட்டத்தில் அரசியல் தலைவர்கள் பேசுவதைகண்டிக்கிறோம். எல்லா மதங்களையும் அரவணைத்துச் செல்வதே மதசார்பின்மையாகும்.

எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்துக்கள் திருடர்கள் என்று கூறி தேர்தலில் பாலு ஜெயிக்கட்டும்பார்க்கலாம்.

மதமாற்றத் தடைச் சட்டத்தை தமிழக அரசு மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+