இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு மாரடைப்பு
சென்னை:
பிரபல இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காமிராக் கவிஞர் என்று அழைக்கப்படும் பிரபல இயக்குநர் பாலுமகேந்திரா பல புகழ் பெற்ற படங்களைஇயக்கியவர். கமல்ஹாசனுக்கு மூன்றாம் பிறை மூலம் தேசிய விருது வாங்கிக் கொடுத்தவர்.
ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அழியாத கோலங்கள், மூடுபனி,நெஞ்சத்தைக் கிள்ளாதே, மீண்டும் கோகிலா, சதி லீலாவதி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர்.
சமீப காலமாக அதிக படங்களை இயக்காமல் அமைதியாக இருந்து வந்த பாலுமகேந்திரா, "சுள்ளான்" தனுஷைவைத்து அது ஒரு கனாக் காலம் என்ற படத்தை இயக்கி வந்தார்.
சமீப காலமாக கால்ஷீட் சொதப்பலுக்குப் பெயர் பெற்றுள்ள தனுஷ், பாலுமகேந்திரா படத்திற்கும் டேக்கா கொடுக்கஆரம்பித்தார். இதனால் வெறுத்துப் போன பாலுமகேந்திரா படத்தை இயக்குவதை நிறுத்தி விட்டார்.
பின்னர் பல்வேறு சமரசங்களுக்குப் பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. இரவு பகலாக படப்பிடிப்பைநடத்தி வந்தார் பாலுமகேந்திரா. முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாவது கட்டமாக ஊட்டியில்சில காட்சிகளைப் பதிவு செய்ய முடிவு செய்திருந்தார் பாலு.
இதற்காக கார் மூலம் அவர் ஊட்டிக்குக் கிளம்பினார். ஆனால் வீட்டை விட்டுக் கிளம்பிய சிறிது நேரத்திலேயேஅவருக்கு நெஞ்சு வலித்துள்ளது. இதையடுத்து வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications